ஈராக்கில் மூக்கில் ரத்தம் வடிய செய்யும் புதுவகையான மர்ம காய்ச்சல்: உலக நாடுகள் அச்சம்

ஈராக்: ஈராக்கில் மூக்கில் ரத்தம் வடிய செய்யும் புதுவகையான மர்ம காய்ச்சலுக்கு பலரும் பலியாகி வருவது உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் இந்நோய் இந்தியாவிற்குள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நோய் மற்ற வைரஸ் தொற்றுகளை போல இதன் பிறப்பிடமும் ஆப்பிரிக்க ஆகும். இதனால் இந்த வைரசுக்கு காங்கோ காய்ச்சல் என கூறுகின்றனர்.43 ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்த நோய் ஈராக்கில் நுழைந்துவிட்ட நிலையில் இன்று நோய் பாதிப்புக்கு ஆளாகும் 5 பேரில் ஒருவர் உயிரிழப்பது தான் மிகவும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  ஆடுகளும் மாடுகளும் ஒரு விதமான உண்ணி தாக்குதலுக்கு ஆளாகும்போது அந்த உண்ணி மூலமும், இறைச்சிக்காக ஆடுகள் வெட்டப்படும்போதும் விலங்குகளுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்களுக்கு இந்த காய்ச்சல் பாதிப்பிற்கு எளிதில் ஆளாகிவிடுகின்றனர்.இதனால் இந்த காய்ச்சலோடு வாந்தியுடன் உடலுக்கு உள்ளேயும் வெளியேயும் ரத்த கசிவு ஏற்படுகிறது. அத்ததுடன் மூக்கில் இருந்து தொடர்ந்து ரத்தம் வெளியேற செய்து பாதிக்கப்பட்டவரை உயிரிழக்க செய்கிறது. தற்போது 33 வயதிற்கு உட்பட்டவர்கள் இந்த வைரஸால் அதிகம் பாதிக்கப்படுவது இளம் வயதினரை கூடுதலாக எச்சரிக்கிறது.உடலில் ரத்தக்கசிவு ஏற்படுத்த கூடிய இந்த காய்ச்சலுக்கு இதுவரை தடுப்பொசி கண்டுபிடிக்க முடியாமல் மருத்துவர்கள் திணறிவரும் நிலையில் ரிபாவிரின் என்ற வைரஸ் தடுப்பு மருந்து சிகிக்சை பலன் தருவது  சற்று ஆறுதலை தருகிறது. பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து உண்ணிகளை கொல்வதே இந்த காய்ச்சலை கட்டுப்படுத்தும் முக்கிய கருவியாக உள்ளது….

The post ஈராக்கில் மூக்கில் ரத்தம் வடிய செய்யும் புதுவகையான மர்ம காய்ச்சல்: உலக நாடுகள் அச்சம் appeared first on Dinakaran.

Related Stories: