இளையான்குடி அருகே பெண்ணிடம் 6 பவுன் நகை பறிப்பு

இளையான்குடி, செப்.10: இளையான்குடி அருகே சங்கனியைச் சேர்ந்த கண்ணன் மனைவி வசந்தா(40), சாலைக் கிராமத்தில் வசித்து வருகிறார். நேற்று ஆனந்தூரில் உள்ள உறவினர் திருமணத்திற்கு சென்றுவிட்டு மாலை வந்துள்ளார். உதயனூர் பஸ் ஸ்டாப் அருகே வந்த போது டூவீலரில் பின்னால் வந்த மர்ம நபர் வசந்தாவின் டூவீலர் அருகே வந்து கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்க செயினை பறிக்க வேகமாக சாலைக்கிராமம் ரோட்டில் வந்துள்ளான்.

வசந்தாவும் திருடனை பிடிக்க டூவீலரில் பின்னால் விரட்டி வந்துள்ளார். துகவூர் வந்த போது டூவீலர் கட்டுப்பாட்டை இழந்த வசந்தா கீழே விழுந்துள்ளார். அதனால் வேகமாக செயினை பறித்து விட்டு தப்பி சென்றுள்ளான். கீழே விழுந்ததில் உடலில் காயங்கள் ஏற்பட்ட வசந்தா சாலைக் கிராமம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இளையான்குடி போலீசார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து திருடனை தேடி வருகின்றனர்.

The post இளையான்குடி அருகே பெண்ணிடம் 6 பவுன் நகை பறிப்பு appeared first on Dinakaran.

Related Stories: