இலுப்பைக்கோரை அரசு பள்ளிக்கு ரூ.4.67 லட்சத்தில் தளவாட பொருட்கள்

 

கும்பகோணம், செப். 21: கும்பகோணம் அருகே இலுப்பைக்கோரை அரசு உயர்நிலைப்பள்ளிக்கு எம்எல்ஏ நிதியில் ரூ.4.67 லட்சம் மதிப்பீட்டில் மேசை, நாற்காலி தளவாட பொருட்களை எம்எல்ஏ ஜவாஹிருல்லா வழங்கினார். தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ஒன்றியம், இலுப்பைக்கோரை ஊராட்சியில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப்பள்ளிக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.4.67 லட்சம் மதிப்பீட்டில் மேசை, நாற்காலி தளவாடங்கள் பொருட்களை பாபநாசம் எம்எல்ஏ ஜவாஹிருல்லா வழங்கி மாணவர்களிடையே கல்வியின் அவசியம் குறித்து உரையாற்றினார்.

மேலும் இந்த பள்ளிக்கு நுழைவு வாயில் மற்றும் கதவு அமைக்க ரூ.3 லட்சம் நிதியை எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் பரிந்துரை செய்துள்ளதாக தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில், பாபநாசம் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் நாசர், பாபநாசம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சுமதி கண்ணதாசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், குமார், இலுப்பைக்கோரை ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார், திமுக ஒன்றிய துணைச்செயலாளர்கள் கருணாகரன், கலியமூர்த்தி, மமக தஞ்சாவூர் வடக்கு மாவட்ட தலைவர் ஹிபாயத்துல்லா மற்றும் பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், பொதுமக்கள், கிராம பெரியவர்கள், திமுக, மமக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post இலுப்பைக்கோரை அரசு பள்ளிக்கு ரூ.4.67 லட்சத்தில் தளவாட பொருட்கள் appeared first on Dinakaran.

Related Stories: