ராமேஸ்வரம்: பாம்பன், மண்டபம் உள்ளிட்ட கடல் சீற்றம் காரணமாக மறு அறிவிப்பு வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் கடந்த 6 நாட்களுக்கு மேலாக பலத்த காற்று வீசுகிறது. இதனால் ராமேஸ்வரம், பாம்பன் பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல கூடாது என்று மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்றும் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் 1200 விசைப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளது.
