அரசு பள்ளியில் கலைத் திருவிழா

தர்மபுரி, செப்.12: நல்லம்பள்ளி ஒன்றியம், சந்தாரப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் கலைத்திருவிழா நடந்தது. பள்ளியின் தலைமையாசிரியர் சேகர் தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். பெற்றோர்கள் மற்றும் சுய உதவிக் குழுவினர் கலந்து கொண்டனர். மாணவர்கள் தனிநபர் நடனம், குழு நடனம், நாட்டுப்புற பாடல்கள் மற்றும் நாட்டுப்பற்று பாடல்களுக்கு நடனம் ஆடினர். ஆசிரியர்கள் சீனிவாசன், சுப்ரமணி, சோபியா, முனிராஜ் மற்றும் முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post அரசு பள்ளியில் கலைத் திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: