அனல்மின் நிலைய மாஜி பொறியாளர் வீட்டில் 25 கிலோ வெள்ளி கொள்ளை

தூத்துக்குடி, ஜூலை 13: தூத்துக்குடி ஆசிரியர் காலனி 7வது தெருவைச் சேர்ந்தவர் ரோச்சர் (76). தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் இளநிலைப் பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர், தனது மனைவியின் மருத்துவ சிகிச்சைக்காக கடந்த சில தினங்களுக்கு முன் வீட்டை பூட்டிவிட்டு கேரளா சென்றார். நேற்று முன்தினம் இவரது வீட்டின் கதவில் பூட்டுக்கள் உடைக்கப்பட்டு கிடந்தது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் அவருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர். தென்பாகம் போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். வீடு பூட்டியிருந்ததை நோட்டமிட்டு உள்ளே புகுந்த மர்ம நபர்கள் 2.5 பவுன் தங்க நகை, ₹25ஆயிரம் ரொக்கம் மற்றும் 25 கிலோ வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.இதுகுறித்து எஸ்.ஐ. முகிலரசன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.

The post அனல்மின் நிலைய மாஜி பொறியாளர் வீட்டில் 25 கிலோ வெள்ளி கொள்ளை appeared first on Dinakaran.

Related Stories: