கோவை: அன்னூர் அருகே கிணற்றில் இருந்து சாக்கு மூட்டையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்கப்பட்டது. அன்னூர் – மேட்டுப்பாளையம் சாலையில் தனியார் இடத்தில் உள்ள கிணற்றில் இருந்து பெண் சடலம் மீட்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர் நிகழ்விடத்துக்கு வந்து கயிறு கட்டி கிணற்றில் இருந்து சடலத்தை மீட்டனர். பெண் சடலமாக மீட்கப்பட்டது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
