திரிபுரா ஐஏஎஸ் அதிகாரியின் வங்கி டெபாசிட் முடக்கம்

 

புதுடெல்லி: திரிபுராவில் பணியில் உள்ள மூத்த அரசு அதிகாரிகளுடன் தனக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாக கூறி தொழிலதிபர்களை ஏமாற்றிய உத்பால் குமார் சவுத்ரி என்பவருக்கு எதிராக பணமோசடி வழக்கு குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகின்றது.  மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் உத்பால் குமார் சவுத்ரி, உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரியாக காட்டிக் கொண்டதாகவும், அதற்காக போலி அடையான அட்டைகளை பெற்ற குற்றச்சாட்டில் வழக்கில் பணி நீக்கம் செய்யப்பட்ட திரிபுரா ஐஏஎஸ் அதிகாரி அபிஷேக் சந்திரா பெயரில் உள்ள சுமார் ரூ 1.12கோடி மதிப்புள்ள வங்கி டெபாசிட்ட தொகைகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.

Related Stories: