டெல்லி: டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினரை போலீஸ் கைது செய்தது. பிரதமர் மோடி, தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரி கைகளில் விலங்கிட்டு காங்கிரசார் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லி லோக் கல்யாண் மார்க்கில் உள்ள பிரதமர் இல்லம் நோக்கி பேரணி செல்ல முயன்ற காங்கிரசார் கைது செய்யப்பட்டார். நீட் முறைகேட்டுக்கு பொறுப்பேற்று பிரதமர் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் முழக்கமிட்டனர்.
