மாவட்ட வருவாய் அலுவலர் பொறுப்பேற்பு

 

கோவை, ஜூலை 20: கோவை மாவட்ட வருவாய் அலுவலராக பணிபுரிந்த மதுராந்தகி, மாவட்ட ஒழுங்கு நடவடிக்கை குழு ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து சென்னை மக்கள் தொடர்பு துறை இணை இயக்குனராக பணிபுரிந்த சுரேந்திரன் கோவை மாவட்ட வருவாய் அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்த நிலையில் சுரரேந்திரன் நேற்று கோவை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலராக பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு அரசு அதிகாரிகள், ஊழியர்கள் வாழ்த்துகள் தெரிவித்தனர்.

Related Stories: