மதுரை: பழனி கோயில் நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் பணியிடை நீக்க நடவடிக்கைக்கு உள்ளான சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் தாக்கல் செய்த முன் ஜாமின் மனு மீது இன்று உயர் நீதிமன்றக் கிளையில் விசாரணைக்கு வருகிறது. இதற்கிடையே, அவருக்கு முன் ஜாமின் வழங்கக் கூடாது என கோயில் நிர்வாகம் தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
