×

டிடிவி பேசாம இருந்தா மரியாதைய காப்பாத்திக்கலாம்: அமைச்சர் நிர்மல்குமார் பதிலடி

திருப்பரங்குன்றம்: மதுரை திருநகருக்கு நேற்று வந்த அமைச்சர் நிர்மல்குமாரிடம், செய்தியாளர்கள், ‘முதல்வரை டிடிவி.தினகரன் கடுமையாக விமர்சித்து பேசியுள்ளாரே’ என்றனர். அதற்கு பதிலளித்து அமைச்சர் நிர்மல்குமார் கூறியதாவது: டிடிவி.தினகரன், எடப்பாடியை காலி செய்ய வேண்டும். எடப்பாடி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் துரோகிகள் என்று கூறி கட்சி தொடங்கினார்.

பின்னர் யாரை எதிர்த்து கட்சி தொடங்கினாரோ, அதே எடப்பாடியை முதல்வராக்க கவர்னர் மாளிகையில் போய் நின்றார். அவர் பொதுத்தளத்தில் மரியாதையை இழந்து விட்டார், அவருடன் பயணித்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், இன்று நடுத்தெருவில் நிற்கிறார்கள். அவருக்கு எல்லாம் புரியும். ஆனால் காலம் கருதி ஆற்று நீர்போல் வளைகிறார். இது அவரது போதாத காலம். கொஞ்ச நாள் அவர் பேசாமல் இருந்தால், இருக்கும் மரியாதையை காப்பாற்றிக் கொள்ளலாம். இவ்வாறு கூறினார்.

Tags : TTV ,Minister ,Nirmalkumar ,Thiruparankundram ,Madurai Thirunagar ,Dinakaran ,Edappadi ,O. Panneerselvam ,
× RELATED பழநி மடத்திற்கு சொந்தமான ரூ.100 கோடி...