உபி பேரவை தேர்தல்; பாஜ தலைவர் ஆலோசனை

லக்னோ: உபி சட்டமன்றத்திற்கு அடுத்தாண்டு தேர்தல் நடக்கிறது. இதையொட்டி கட்சி தலைவர்கள் மற்றும் கூட்டணி தலைவர்களுடன் ஆலோசனை நடத்துவதற்காக பாஜ தேசிய தலைவர் நிதின் நபின் நேற்று லக்னோ வந்தார். பாஜவின் முன்னாள் மாநில தலைவர்களுடன் நிதின் நபின் நேற்று ஆலோசனை நடத்தினார். இது குறித்து வட்டாரங்கள் கூறுகையில், வரும் சட்டமன்ற தேர்தலுக்கான உத்தி குறித்து கட்சியின் தலைவர்களுடன் நிதின்நபின் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் முன்னாள் மாநில தலைவரும் எம்பியுமான வினய் கட்டியார் கலந்து கொள்ளவில்லை.

Related Stories: