சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் கேட்பதில் ஏற்பட்ட தகராறில், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் மோகனா மற்றும் பயணச்சீட்டு பரிசோதகர் ஷல்மா பேகம் இருவரிடையே கைகலப்பு ஏற்பட்டது. வீடியோ எடுத்ததால் ஏற்பட்ட மோதலில், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக வழக்கறிஞர் மீதும், தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டியதாக டிடிஆர் மீதும் சட்டப்பிரிவுகளில் ரயில்வே போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
