புதுடெல்லி: தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் 2026ம் ஆண்டுக்கான முதுநிலை நீட் தேர்வு ஆகஸ்ட் 30ம் தேதி ஆன்லைன் முறையில் நடக்கிறது. செப்டம்பர் 30ம் தேதி ரிசல்ட் வெளியிடப்படும். இதற்கான விண்ணப்ப பதிவு நேற்று மாலை 5 மணிக்கு தொடங்கியது. இந்த தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் வரும் 21ம் தேதி நள்ளிரவு 11.55 மணியுடன் முடிவுக்கு வருகிறது. விருப்பம் உள்ளவர்கள் natboard.edu.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பம் செய்யலாம்.
தேர்வு மையங்களை ஒதுக்கும் நடைமுறை ஆகஸ்ட் 11ம் தேதி தொடங்கும். இந்த முறை முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற முறையில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் இடங்கள் இருக்காது. இதனால் முன்கூட்டி விண்ணப்பம் செய்வோருக்கும் குறிப்பிட்ட நகர் அல்லது குறிப்பிட்ட தேர்வு மையங்களை ஒதுக்கீடு செய்வதில் முன்னுரிமை வழங்கப்படாது. விண்ணப்பத்தை 3 மாதத்திற்குள் எடுத்த புகைப்படத்துடன் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
