சென்னை: அமைச்சர் செங்கோட்டையனை கண்டித்து நாளை மறுநாள் போராட்டம் நடத்தப்போவதாக தமிழ் புலிகள் கட்சி அறிவித்துள்ளது. பள்ளி மாணவர்களுக்கு ஜாதி பெயருடன் அடையாள அட்டை வழங்குவதாக அறிவித்த செங்கோட்டையனுக்கு தமிழ் புலிகள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. மாவட்ட தலைநகரங்களில் ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு செங்கோட்டையனை கண்டித்து நாளை மறுநாள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
