சென்னை: அமோனியா வாயுக் கசிவு விபத்தில் இறந்ததாக அறிவிக்கப்பட்ட பெண், ஆந்திரப் பிரதேசத்தில் உயிருடன் இருப்பது தெரிந்தது. ஒடிசாவைச் சேர்ந்த பூர்ணிமா ஜுவாங்கா என்ற பெண் அமோனியா கசிவால் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது. அமோனியா வாயு கசிவு விபத்து விசாரணையின்போது, ஆதார் மோசடி கும்பல் குறித்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. ஒரே ஆதார் அட்டையை பல தொழிலாளர்கள் பயன்படுத்தி வேலை பெற்றது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
