சென்னை: நடிகை கவுதமி அளித்த நில அபகரிப்பு புகாரில் அழகப்பன், அவரது குடும்பத்தினர் மீது வழக்கு தொடர்ந்திருந்தார். நடிகை கவுதமி அளித்த புகாரில் பதியப்பட்ட வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். அழகப்பன் வீடு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை செய்து வருகிறது. சென்னை, மதுரையில் 6 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
