சென்னை: ஐகோர்ட் உத்தரவை மீறி ஊடகங்களில் பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு நடிகர் ரவிமோகன் கேட்டுள்ளார். எனது கருத்தால் மனவேதனை அடைந்த அனைவரிடமும் எனது வருத்தத்தையும், மன்னிப்பையும் கேட்கிறேன். மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரி நடிகர் ரவிமோகன் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. விவகாரத்து வழக்கு தொடர்பாக பொதுவெளியில் கருத்து தெரிவிக்க இரு தரப்புக்கும் ஐகோர்ட் தடை விதித்தது.
