சிறுமிகளை விபசாரத்தில் தள்ளும் பாகிஸ்தான் கும்பல் 700 ஆண்களால் பாலியல் வன்கொடுமை: இங்கிலாந்து எம்பி அதிர்ச்சி தகவல்

லண்டன்: இங்கிலாந்து நாட்டின் பல்வேறு இடங்களில் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் சிறுமிகளை கடத்தி பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுகின்றனர் என்ற அதிர்ச்சி தகவலை எம்பி ஒருவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து எம்பியான ரூபர்ட் லோவே சமீபத்தில் நாடாளுமன்றத்தில் பேசும் போது, இங்கிலாந்து நாட்டின் பல்வேறு மாநிலங்களில் சிறுமிகள் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகி உயிர் பிழைத்தவர்களின் அறிக்கைகளை வாசித்தார். அதில் அவர் கூறியதாவது: இது போன்ற திட்டமிட்டு பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் பாகிஸ்தான் வம்சாளியை சேர்ந்த கார் டிரைவர்கள் மற்றும் சந்தைகளில் வர்த்தகத்தில் ஈடுபடும் வியாபாரிகள் ஆவர்.

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானவர்கள் 12 வயது முதல் 15 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள்.அதில் ஒரு சிறுமி தனக்கு 13 வயதாக இருந்த போது பாலியல் கொடுமைக்கு ஆளானதாகவும் 3 ஆண்டுகளில் 600 முதல் 700 ஆண்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாக தெரிவித்தார்.

அதில் ஒருவர் நாய் கூண்டுக்குள் 15 முதல் 20 சிறுமிகள் அடைக்கப்பட்டிருந்தனர் என்றும் பாதிக்கப்பட்டவர்களின் தேர்வு மக்கள் தொகையில் இனம் பங்கு வகித்தது. பாலியல் வன் கொடுமையினால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் வெள்ளை இனத்தவராகவே இருந்தனர். காவல் துறை அதிகாரிகளும் இதில் சம்மந்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: