சென்னை: அதிமுகவுக்கு தற்போது ஏற்பட்டுள்ள சோதனைகளைக் கண்டு நிர்வாகிகள், தொண்டர்கள் மனம் தளர வேண்டாம் என அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அதிமுகவினர் எவ்வித விபரீத செயல்களிலும் ஈடுபட வேண்டாம் என பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். அதிமுக மீண்டு எழுவதற்கு தேவையான நடவடிக்கைகளை நான் மேற்கொண்டு வருகிறேன் என்று அவர் கூறியுள்ளார். தற்போதைய சூழலை நினைத்து அச்சம், பதற்றத்துக்கு அதிமுக தொண்டர்கள் ஆளாக வேண்டாம் என்று பழனிசாமி கூறியுள்ளார்.
