வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு மே 30ல் திருச்செந்தூர்- நெல்லை இடையே ரயில் சேவை!

திருசெந்தூர்: வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு மே 30ல் திருச்செந்தூர்-நெல்லை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பக்தர்களின் வசதிக்காக முன்பதிவில்லா சிறப்பு பயணிகள் ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சாதாரண நாட்களிலேயே பக்தர்கள் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் திருச்செந்தூர் கோவிலுக்கு வைகாசி விசாகத்திற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கானோர் வருவார்கள்.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில்;

வைகாசி விசாகத்தையொட்டி திருச்செந்தூர் நெல்லை இடையே மே 30-ல் முன்பதிவில்லா பயணிகள் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. மே 30 இரவு 11.30 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்படும் ரயில் மே 31 நள்ளிரவு 12.40 மணிக்கு திருச்செந்தூர் சென்றடையும்.

மே 30-ம் தேதி இரவு 9 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து புறப்படும் ரயில் அதே நாள் இரவு 10.30 மணிக்கு நெல்லை சென்றடையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வைகாசி விசாகத்தையொட்டி சிறப்பு ரயில் விடப்பட்டுள்ளதால் பக்தர்கள் சிரமமின்றி வழிபாடு செய்துவிட்டு சொந்த ஊர்களுக்கு திரும்புவர்.

Related Stories: