மேற்குவங்க பா.ஜ அரசு அறிவிப்பு: ஜூன் 1 முதல் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவசப் பயணம்

 

கொல்கத்தா: மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ வென்று புதிய முதல்வராக சுவேந்து அதிகாரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து பெண்களின் அதிகாரத்துவத்தை மேம்படுத்துவதையும், பொதுப் போக்குவரத்து வசதியை எளிதாக்குவதையும் நோக்கமாகக் கொண்ட திட்டத்தின் ஒரு பகுதியாக, ஜூன் 1 முதல் மேற்குவங்க அரசு இயக்கும் அனைத்துப் பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசப் பயணம் அனுமதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. மே 21 அன்று மாநிலப் போக்குவரத்துத் துறை வெளியிட்ட அறிவிப்பின்படி, மேற்கு வங்கத்தில் இயக்கப்படும் குறுகிய மற்றும் நீண்ட தூர அரசுப் பேருந்துகள் இரண்டிலும் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யத் தகுதி பெறுவர்.

தகுதிவாய்ந்த அனைத்துப் பெண்களும், அந்தந்தப் பகுதி பிடிஓ அல்லது எஸ்டிஓ அலுவலகங்கள் வாயிலாக விண்ணப்பிக்கும் பட்சத்தில், கியூ ஆர் குறியீடு, புகைப்படம் மற்றும் பயனாளியின் விவரங்கள் அடங்கிய ‘ஸ்மார்ட் கார்டு’ ஒன்று வழங்கப்படும். ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும் வரை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் அட்டை, கடவுச்சீட்டு மற்றும் அரசு வழங்கிய பணி அடையாள அட்டைகள் போன்ற செல்லுபடியாகும் புகைப்பட அடையாள ஆவணங்களைக் காண்பித்து, பெண்கள் இந்தப் பயணச் சலுகையைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அந்த அறிவிப்பு கூறியுள்ளது.

Related Stories: