டெல்லி: தெரு நாய்களை பொது இடங்களில் இருந்து அகற்ற வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிரான மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தெரு நாய்கள் தொடர்பாக விலங்குகள் நல வாரியம் வழங்கிய வழிகாட்டு நெறிமுறைகளை எதிர்த்த அனைத்து மனுக்களையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பொது இடங்களில் சுற்றித்திரியும் தெரு நாய்களை அகற்ற வேண்டும் என்ற உத்தரவில் மாற்றமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
