சத்தியமங்கலம், மே 13: சத்தியமங்கலம் வடக்குப்பேட்டையில் பிரசித்தி பெற்ற தண்டு மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் கம்பம் மற்றும் குண்டம் திருவிழா 1ம் தேதி தொடங்கியது. நேற்று முன்தினம் பவானி ஆற்றில் இருந்து தீர்த்தக் குடம் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடந்தது. வடக்குப்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மேளதாளம் முழங்க பவானி ஆற்றிற்கு சென்றனர்.
ஆற்றங்கரையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பின்னர், தீர்த்த குட ஊர்வலம் கோயிலை சென்றடைந்ததும் தண்டுமாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. ஊர்வலத்தில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று (13ம் தேதி) காலை குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
