ராணிப்பேட்டை மாவட்டத்தில் கோடைகால விளையாட்டு பயிற்சி தொடங்கியது

*200 மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்

வாலாஜா : ராணிப்பேட்டை மாவட்டத்தில் கோடைகால விளையாட்டு பயிற்சி தொடங்கியது. இதில் 200 மாணவர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்ட விளையாட்டு அரங்குகளில் ஏப்ரல், மே மாதங்களில் கோடைகால இலவச விளையாட்டுப் பயிற்சி முகாம்கள் நடைபெறுகின்றன.

தடகளம், கால்பந்து, கபடி, கூடைப்பந்து, நீச்சல், மற்றும் சிலம்பம் போன்ற பல்வேறு விளையாட்டுகளில், பள்ளி மாணவ-மாணவியருக்கு, 15 நாட்களுக்கு சிறப்புப் பயிற்சியாளர்கள் மூலம் இலவசப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்த பயிற்சிகள் பொதுவாக ஏப்ரல் 17 முதல் மே1 அல்லது மே 1 முதல் 15 வரை, காலை அல்லது மாலை நேரங்களில் நடைபெறுகிறது. மேலும் அந்தந்த மாவட்ட விளையாட்டு அரங்குகள், மைதானங்கள் மற்றும் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில், வேலை நேரங்களில் தங்களது பெயர்களை முன்பதிவு செய்யலாம்.

இதில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ்கள், இலவசப் பயிற்சி மற்றும் விளையாட்டு உபகரணங்கள் சில மையங்களில் கிடைக்கும். அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்த மாவட்டங்களில் கோடைகால விளையாட்டு பயிற்சி தொடங்கி உள்ளது.

அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் இந்த விளையாட்டு பயிற்சி கடந்த 17ம் தேதி தொடங்கியது. இதில் ராணிப்பேட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தடகளம், ஆற்காடு ஏவிஎஸ் விளையாட்டு திடலில் பள்ளியில் கையுந்து பந்து கலவையில் குத்துச்சண்டை, பூட்டு தாக்கு அரசு பயிற்சியில் கோகோ, முத்து கடையில் பேட்மிட்டன் உள்ளிட்ட பயிற்சிகள் நடைபெறுகின்றன.

இதில் மொத்தமாக 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெறுகின்றனர். வருகிற மே 1ம் தேதி வரை இந்த பயிற்சி நடைபெறும் என மாவட்ட விளையாட்டு அலுவலர் ஞானசேகரன் தெரிவித்தார்.

Related Stories: