- சார்மினார்
- ஹைதெராபாத்
- Express
- சென்னை தம்பரம்
- எச்சரிக்கை
- நிலையம்
- யதாத்ரி புவனகிரி மாவட்டம்
- தெலுங்கானா
ஐதராபாத்: ஐதராபாத்தில் இருந்து சென்னை தாம்பரம் இடையே இயக்கப்படும் சார்மினார் எக்ஸ்பிரஸ் நேற்று முன்தினம் தெலங்கானா யதாத்ரி புவனகிரி மாவட்டம், அலேர் ரயில் நிலையத்திற்கு அருகே நெருங்கி கொண்டிருந்தது. அப்போது ரயில் எஸ்.5 பெட்டியின் சக்கரத்தில் இருந்து புகை மற்றும் தீப்பொறி வெளியேறியதால் ரயில் நிறுத்தப்பட்டது. தீ மேலும் பரவ தொடங்கியது.இதையடுத்து ரயில்வே ஊழியர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். பின்னர் ரயில் தாம்பரத்தை நோக்கி புறப்பட்டது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
