கோவை – சத்தியமங்கலம் நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் திமுக நிர்வாகி உள்பட இருவர் உயிரிழப்பு

கோவை: கோவை – சத்தியமங்கலம் நெடுஞ்சாலையில் அன்னூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த தண்ணீர் லாரி எதிரே வந்த கார் மீது மோதிய விபத்தில் திமுக நிர்வாகி உள்பட இருவர் உயிரிழந்துள்ளனர். காரில் பண்ணாரி அம்மன் கோயிலுக்குச் சென்று ஊர் திரும்பிக் கொண்டிருந்த சூலூர் பகுதி பாப்பம்பட்டி கிளைச் செயலாளரான கதிரேசன் (45) மற்றும் அவரது நண்பர் வேல்முருகன் இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், காரில் இருந்த குடும்பத்தினர் 7 பேர் மற்றும் தண்ணீர் லாரியை ஓட்டி வந்த அதன் உரிமையாளர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: