சென்னை: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கி, முதல் முறையாகத் தேர்தலைச் சந்தித்துள்ளது அந்தக் கட்சி. இந்நிலையில், தொடர்ச்சியாகத் தமிழக வெற்றிக் கழகத்தினரும் தவெக ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளவர்களும் இந்தத் தேர்தலில் விஜய் ஃபேக்டர் இருப்பதால் வாக்குப் பதிவு வரலாறு காணாத வகையில் உயரும். விஜய்யால் வாக்குப் பதிவு எண்ணிக்கை அதிகமாகும் எனத் தொடர்ச்சியாகக் கருத்துருவாக்கத்தில் ஈடுபட்டு வந்தனர்.
ஆனால், தரவுகளின் அடிப்படையில் பார்க்கும்போது ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குப்பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை சீராக அதிகரித்து வந்துள்ளதைப் பார்க்க முடியும். அதனால், இந்தத் தேர்தலில் வாக்குப் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததற்கும் விஜய் எனும் ஃபேக்டருக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது என்பதைத் தரவுகள் சொல்கிறது என அரசியல் விமர்சகர்கள் தங்களின் கருத்துக்களைப் பகிர்ந்து வருகிறார்கள்.
தவெக ஆதரவாளர்கள் கட்டமைத்த கருத்துருவாக்கம் பொய்த்துப்போனது எனவும் விமர்சித்துவருகிறார்கள். குறிப்பாக, வாக்குப் பதிவுச் சதவீதம் அதிகரிக்கக் காரணம் எஸ்.ஐ.ஆர். பணியில் வாக்காளர்கள் நீக்கப்பட்டது தான் எனவும் தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்து வருகிறார்கள்.
