பொன்னேரி: தமிழகத்திற்கு வந்ததை பெருமையாக கருதுகிறேன் என்று பொன்னேரி காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி உரையாற்றியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக தமிழக மக்களுடன் ஒரு பிணைப்பை ஏற்படுத்தியுள்ளேன். தமிழ்நாட்டு மக்களோடு எனது உறவு மேம்பட்டு இருக்கிறது. எனது இதயத்தில் தமிழக மக்களுக்கென்று தனி இடம் உண்டு. பொன்னேரியில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி பரப்புரை செய்து வருகிறார்.
