சென்னை: பொய் சொல்வதில் அமைச்சர் நிர்மல்குமார் கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார் என்று ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். மின்சாரத்துறையில் என்ன நடக்கிறது என்பது அமைச்சர் நிர்மல்குமாருக்கே தெரியவில்லை. அரைவேக்காட்டுத்தனமான அணுகுமுறைதான் தமிழ்நாட்டுக்கு ஏற்பட்டிருக்கிறது. காவிரி விவகாரத்தில் வாதத்தை எடுத்து வைக்க தவெக அரசு தவறிவிட்டது. ஊழல் ஒழிந்ததாக மாயையை கட்டமைக்கிறார்கள்; ஆனால் ஊழல் ஒழியவில்லை என்று ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
