மக்களவையில் பொய் தகவல் ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங்குக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் எம்பியான வேணுகோபால் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங்குக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி நோட்டீஸ் அளித்துள்ளார். இந்த கடிதத்தில்,\\” ஜூலை 29ம் தேதி பொதுத்தேர்வுகள் திருத்த மசோதா 2026 மீதான விவாதத்தின்போது, அமைச்சர் ஜிதேந்திர சிங் துப்பாக்கிச்சூடு எதுவும் நடக்கவில்லை, கண்ணீர் புகை குண்டுகள் மட்டும் தான் பயன்படுத்தப்பட்டது.

துப்பாக்கிச்சூடு நடத்தப்படவில்லை என்றால் உத்தரவு பிறப்பிக்கும் கேள்விக்கே இடமில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார். அமைச்சரின் கூற்றுக்கு மாறாக துப்பாக்கிச்சூடு நடந்தது உண்மை. காயமடைந்த நபர் இன்னும் சிகிச்சை பெற்று வருகிறார். எனவே அமைச்சருக்கு எதிராக சிறப்புரிமை நடவடிக்கைகளை தொடங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: