சென்னை: எழும்பூரில் ராஜரத்தினம் மைதானத்தில் காவல்துறையில் சிறப்பாக பணியாற்றும் போலீஸ் அதிகாரிகள், காவலர்கள், சீருடைப் பணியாளர்களை கவுரவித்து முதலமைச்சர் விஜய் விருது வழங்கினார். 2023, 2024 மற்றும் 2025ஆம் ஆண்டுக்கான 665 காவல் துறை அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் பதக்கங்களை வழங்குகிறார். குடியரசுத் தலைவர், உள் துறை அமைச்சர் பதக்கங்களை முதல்வர் விஜய் காவலர்களுக்கு வழங்கினார்.
