மங்களூரு: கா்நாடகா மாநிலம் பண்ட்வால் அடுத்த காக்யபாடா அருகே உள்ள கொடங்கேவைச் சேர்ந்த பாலப்பா கவுடாவின் மகள் லாவண்யா (25). இவர் கல்லட்காவில் உள்ள ஒரு மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்து வந்தார். அந்த இளம் பெண், நேற்று மாலை வேலையை முடித்துவிட்டு வீடு திரும்புவதற்காக, பி.சி. சாலை பேருந்து நிலையத்தில் காக்யபாதவி செல்லும் பேருந்தில் ஏறியிருந்தார். அப்போது வாலிபர் ஒருவர் பேருந்து நிலையம் அருகே காரில் காத்திருந்தார்.
அவர் இருக்கையில் அமர்ந்திருந்தபோது, பேருந்தில் ஏறியிருந்த வாலிபர், அவரது பையிலிருந்து வாளை எடுத்து வெட்ட முயன்றார். இதைக் கண்ட அந்த இளம் பெண் தப்பி ஓட முயன்றார். அவரைத் துரத்தி வந்த அந்த இளைஞன், பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் முன்னிலையில் அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொன்றார். ஒருதலைக்காதலால் தாக்குதலை நடத்திய அந்த வாலிபர் குற்றத்திற்குப் பயன்படுத்திய வாளை அங்கேயே எறிந்துவிட்டு ஒரு காரில் தப்பிச் சென்றான். அவரை பிடிக்க போலீசார் விரைந்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
