×

பாளையில் கந்தூரி விழா

 

ெநல்லை,ஜூன்23: பாளை குலவணிகர்புரம் ரயில்வே கேட் பகுதியில் அமைந்துள்ள காதர் அவுலியா பள்ளிவாசல் மற்றும் காதர் மீரா பக்ருதீன் தர்கா வளாகத்தில் உள்ள காயல்பட்டினம் மகான் முகமது லெப்பை 318வது ஆண்டு நினைவு கந்தூரி விழாவுக்கு கதர் அவுலியா பள்ளிவாசல் மற்றும் காதர் மீரா பக்ருதீன் தர்ஹா தலைவர் எம்.கே.எம். செய்யது அகமது கபீர் தலைமை வகித்தார். பள்ளிவாசல் உறுப்பினர்கள் பேராசிரியர் செய்யது அப்பாஸ், உஸ்மான் அலி, இல்யாஸ், அரிபு சுல்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பள்ளிவாசல் செயலாளரும் முத்தல்லியுமான டாக்டர் எம்.கே.எம். முகம்மது ஷாபி வரவேற்றார். சதக்கத்துல்லா அப்பா கல்லூரி முன்னாள் தமிழ்த்துறை தலைவர் சவுந்திர மகாதேவன், சேரன்மகாதேவி சேகரகுரு கிப்சன் ஞானதாஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மேலப்பாளையம் உஸ்மானிய்யா அரபிக் கல்லூரி முதல்வர் ஹைதர்அலி சிறப்புரையாற்றினார். பள்ளிவாசல் பொருளாளர் முகமது உசேன் நன்றி கூறினார். நிகழ்வில் உலமாக்கள், அறிஞர்கள், சர்வசமய தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

Tags : Kanduri festival ,Palai ,Nallai ,Kadar Auliya Mosque ,Palai Kulavanikarpuram Railway Gate ,Kadar Meera Fakhruddin Dargah complex ,Mahan Muhammad Leppa ,Kayalpattinam ,Kadar Auliya Mosque… ,
× RELATED பெரம்பலூர் மாவட்டத்திற்கான...