×

குத்தாலம் பகுதிகளில் மழை விவசாயிகள் மிக்க மகிழ்ச்சி

 

குத்தாலம், ஜூன் 19: குத்தாலம் பகுதியில் பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான திருவாலங்காடு, மல்லியம், தேரழுந்தூர், மங்கநல்லூர், கோமல், கண்டபுரம், எஸ்.புதூர், பாலையூர், கங்காதரபுரம், நல்லாவூர், பருத்திக்குடி,கோனேரிராஜபுரம் என பல்வேறு பகுதிகளிலும் நேற்று மாலை மழை பெய்தது.இந்த மழையால் குருவை சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் தவெக ஆட்சியில் போதுமான அளவு இல்லாத பிரச்சனை இருந்து வந்த நிலையில், இந்த மழை பெய்து குத்தாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Kutthalam ,Mayiladuthurai district ,Thiruvalankadu ,Malliyam ,Therazundur ,Manganallur ,Komal ,Kandapuram ,S. Puthur ,Palaiyur ,Gangadharapuram ,Nallavoor ,Paruthikudi ,Konerirajapuram ,
× RELATED பெரம்பலூர் மாவட்டத்திற்கான...