இதன்மூலம், வாக்குப்பதிவு இயந்திரத்தில் தவறுதலாக வேறு சின்னத்துக்கு தங்களுடைய ஓட்டு விழுந்திருந்தால் வாக்காளர்கள் அதை எளிதாக கண்டுபிடித்து புகார் அளிக்கவும் முடிகிறது. தற்போதைய நடைமுறைப்படி வாக்கு எண்ணிக்கையின்போது ஒவ்வொரு தொகுதியிலும் தலா 5 விவிபேட் இயந்திரங்களில் உள்ள ஒப்புகைச் சீட்டுகள் மட்டுமே எண்ணப்பட்டு சரிபார்க்கப்படுகிறது. இந்த நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை விவிபேட் சீட்டுகளுடன் சரிபார்ப்பதை கட்டாயமாக்க கோரியும் இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் கமிலஸ் செக்வா என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கங்கா பூர்வாலா, சத்ய நாராயண அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இதே விவகாரம் தொடர்பாக ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், உயர்நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்றும் வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறி வழக்கை முடித்து வைத்துள்ளனர்.
The post மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை விவிபேட் சீட்டுகளுடன் சரிபார்ப்பதை கட்டாயமாக்க கோரிய வழக்கு!! appeared first on Dinakaran.