விராலிமலை அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதி தந்தை, மகன் உயிரிழப்பு..!!

புதுக்கோட்டை: விராலிமலை அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் படுகாயமடைந்த தந்தை, மகன் உயிரிழந்தனர். புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே உள்ள கடம்பராயன்பட்டி உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் பழனியாண்டி(65), சத்யகுமார்(30) தந்தை மகனான இவர்கள், கடந்த 20 ஆம் தேதி மகன் சத்யகுமாரின் திருமணத்திற்கு பெண் பார்பதற்கு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டில் இருந்து புறப்பட்டு இலுப்பூர் வழியாக மணப்பாறைக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் இருசக்கர வாகனம் இலுப்பூர் அருகே உள்ள மேட்டுச்சாலை எனும் இடத்தின் அருகே சென்ற போது அவ்வழியே வேகமாக வந்த அடையாளம் தெரியாத டிப்பர் லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. பலத்த காயமடைந்த இருவரையும் அவ்வழியே சென்றவர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்நிலையில் கடந்த சில நாள்களாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் இருவரும் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தனர்.

The post விராலிமலை அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதி தந்தை, மகன் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: