The post பட்டாசு வழக்கில் இன்று தீர்ப்பு appeared first on Dinakaran.
பட்டாசு வழக்கில் இன்று தீர்ப்பு

புதுடெல்லி: நாடு முழுவதும் பட்டாசு தயாரிப்பு, விற்பனை, வெடிக்க தடைக்கோரி அர்ஜுன் கோபால், சுபாஷ் தத்தா உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா மற்றும் எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நிலையில் கடந்த வாரம் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் பட்டாசு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எஸ்.போபன்னா மற்றும் எம்.எம்.சுந்தரேஷ் அமர்வு இன்று தீர்ப்பு வழங்குகிறது.