வரும் 16ம் தேதி முதல் வைகை எக்ஸ்பிரஸ் ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும்: தெற்கு ரயில்வே தகவல்

சென்னை: தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: தெற்கு ரயில்வே சார்பில் இயக்கப்படும் ரயில்களில் 10 ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. யஷ்வந்த்பூர்- சென்னை சென்ட்ரல் -யஷ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் வரும் 15ம் தேதி முதல் வாலாஜா ரோட் ரயில் நிலையத்திலும், வைகை எக்ஸ்பிரஸ் ரயில் வரும் 16ம் தேதி முதல் ரங்கம் ரயில் நிலையத்திலும், ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரயில் வரும் 16ம் தேதி கல்லக்குடி பலகநத்தம் ரயில் நிலையத்திலும் நின்று செல்லும்.

சென்ட்ரல் – சாய் பிரசாந்தி நிலையம்எக்ஸ்பிரஸ் ரயில் 5ம் தேதி முதல் சோளிங்கர் ரயில் நிலையத்திலும்,அதேபோல வரும் 16ம் தேதி முதல் எழும்பூர் – புதுச்சேரி இடையே தினமும் இயக்கப்படும் ரயில்கள் மயிலம் ரயில் நிலையத்திலும், சென்னை எழும்பூர் – குருவாயூர் இடையே இயக்கப்படும் ரயில்கள் ஆரல்வாய்மொழி ரயில் நிலையத்திலும், எழும்பூர் – காரைக்கால் இடையே தினமும் இயக்கப்படும் ரயில்கள் கடலூர் துறைமுகம் ரயில் நிலையத்திலும், எழும்பூர் – மன்னார்குடி இடையே இயக்கப்படும். ரயில்கள் கொரடாச்சேரியில் நின்று செல்லும்.

The post வரும் 16ம் தேதி முதல் வைகை எக்ஸ்பிரஸ் ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும்: தெற்கு ரயில்வே தகவல் appeared first on Dinakaran.

Related Stories: