இது ஆளும் ஜனநாயக கட்சிக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. இந்நிலையில் துணை அதிபராக உள்ள இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ், அதிபர் தேர்தலில் போட்டியிட்டால், அவருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாக கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. அட்லாண்டா விவாதத்துக்கு பின், அதிபர் வேட்பாளர் ஜோ பைடனை மாற்ற வேண்டும் என்ற வாதம் ஜனநாயக கட்சிக்குள் எழுந்துள்ளது. கருத்துக்கணிப்பின்படி, டிரம்புக்கு 47 சதவீத மக்களும், கமலா ஹாரிசுக்கு 45 சதவீத மக்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதனால், அதிபர் பதவிக்கு கமலா ஹாரிஸ் போட்டியிட்டால், வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாக தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் மனைவி மிச்சைல் ஒபாமா போட்டியிட்டால், அவருக்கு 50 சதவீத மக்களின் ஆதரவும், டிரம்புக்கு 39 சதவீத மக்களின் ஆதரவும் கிடைக்கும் என கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
The post அமெரிக்க அதிபர் தேர்தல்; கமலா ஹாரிசுக்கு பெருகும் ஆதரவு appeared first on Dinakaran.