சிஏஜியின் மத்திய செலவினங்கள் பிரிவின் தலைமை இயக்குநராக சூர்யகாந்த் சிர்ஷாத் பதவி வகித்து வந்தார். இவர் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை தணிக்கை செய்து முறைகேடுகளை அம்பலப்படுத்தினார். இந்நிலையில் சூர்யகாந்த் சிர்ஷாத் தற்போது சிஏஜியில் காலியாக இருந்த சட்ட இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார். இதேபோல் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் முறைகேட்டை சிஏஜி வடமத்திய மண்டல இயக்குநராக இருந்த அசோக் சின்ஹா வெளிப்படுத்தினார். அவர் தற்போது சிஏஜி அலுவல் மொழி இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து காங்கிரஸ் பொதுசெயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டிவிட்டர் பதிவில், “மோடி அரசின் ஊழல்களை அம்பலப்படுத்தும் அதிகாரிகளை அச்சுறுத்துவது அல்லது அவர்களை பணியில் இருந்து அகற்றுவதே பாஜவின் தொடர் செயல்பாடாக உள்ளது. பாஜவின் ஊழல்கள் விவகாரத்தில் மோடி மாஃபியா பாணியில் செயல்படுகிறார். ஒன்றிய கணக்கு தணிக்கை அதிகாரிகளின் இடமாற்ற உத்தரவுகளை அரசு உடனே திரும்ப பெற வேண்டும். ஆயுஷ்மான் பாரத், துவாரகா விரைவு சாலை, பாரத்மாலா உள்ளிட்ட ஊழல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.
The post ஒன்றிய அரசு திட்டங்களில் ரூ.7.50 லட்சம் கோடி இழப்பு மோடி அரசின் ஊழலை அம்பலப்படுத்திய சிஏஜி அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம்: காங்கிரஸ் கண்டனம் appeared first on Dinakaran.