டிடிவி.தினகரனுடன் நடிகை ரோஜா சந்திப்பு

திருச்செந்தூர்: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரனை, ஆந்திர மாநில அமைச்சரான நடிகை ரோஜா திடீரென சந்தித்து பேசினார். ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் நடிகை ரோஜா, கடந்த 15ம் தேதி மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தரிசனம் செய்தார். மதுரையில் தங்கியிருந்த நேரத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரனை நடிகை ரோஜா சந்தித்து பேசியதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில், திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் நேற்று முன்தினம் இரவு நடிகை ரோஜா சுவாமி தரிசனம் செய்தார். பிரதோஷத்தை முன்னிட்டு ஏகாந்த தரிசனம் செய்த அவர் மூலவர், சண்முகர் மற்றும் தட்சிணாமூர்த்தி சன்னதிகளில் சிறப்பு வழிபாடு நடத்தினார். பின்னர் அவர் அளித்த பேட்டியில் ‘‘எனது ராசி பலனுக்கு குரு மாறியிருப்பதால் பிரதோஷ நாளில் தரிசனம் செய்ய வந்தேன். ஆந்திராவில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் 175 தொகுதிகளிலும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அமோக வெற்றி பெறும்’ என்றார். அப்போது, டிடிவி.தினகரனுடனான சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அதுபற்றி எதுவும் பதிலளிக்காமல் குலவையிட்டு கிண்டல் செய்துவிட்டு சென்றார்.

The post டிடிவி.தினகரனுடன் நடிகை ரோஜா சந்திப்பு appeared first on Dinakaran.

Related Stories: