அஞ்சலிக்காக ஆம்ஸ்ட்ராங்கின் உடலை ரயில்வே மைதானத்தில் வைக்க பிஎஸ்பி நிர்வாகிகள் கோரிக்கை

சென்னை: அஞ்சலிக்காக ஆம்ஸ்ட்ராங்கின் உடலை ரயில்வே மைதானத்தில் வைக்க பிஎஸ்பி நிர்வாகிகள் அனுமதி கேட்டு உள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் அஞ்சலிக்காக உடலை வைக்க திட்டமிடும் நிலையில் நிர்வாகிகள் கோரிக்கை வைத்துள்ளனர். கட்சி அலுவலகம் சிறிய இடத்தில் இருப்பதால் ரயில்வே மைதானத்தில் அஞ்சலி செலுத்த அனுமதி அளிக்க கோரிக்கை வைத்துள்ளனர். கட்சி அலுவலகத்தில் காவல் கூடுதல் ஆணையர் ஆஸ்ரா கார்க்கை தொடர்ந்து ஐபிஎஸ் சுதாகர் ஆய்வு செய்துவருகிறார்.

The post அஞ்சலிக்காக ஆம்ஸ்ட்ராங்கின் உடலை ரயில்வே மைதானத்தில் வைக்க பிஎஸ்பி நிர்வாகிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: