கடலூரில் கிலோ ரூ.20க்கு தக்காளி விற்பனை

கடலூர்: நாடு முழுவதும் தக்காளி கிலோ ரூ.160 முதல் ரூ.180 வரை விற்பனை செய்யப்பட்டது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் ரூ.60க்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், கடலூர் முதுநகர் சாலக்கரையில் அமைந்துள்ள ஒரு காய்கறி கடையில் நேற்று காலை ஒரு கிலோ தக்காளி ரூ.20க்கு விற்கப்பட்டது. அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நீண்ட கியூவில் நின்று தக்காளியை வாங்கி சென்றனர். ஒருவருக்கு ஒரு கிலோ தக்காளி மட்டுமே வழங்கப்பட்டது. கடையின் உரிமையாளர் கூறுகையில், மக்களின் நலனுக்காகவே ரூ.20க்கு தக்காளி விற்கிறேன். ஒரே நாளில் ஒன்றரை டன் விற்று தீர்ந்தது என்றார். கடைகளில் நேற்று தக்காளி ரூ.50 முதல் ரூ.60க்கு விற்கப்பட்டது.

The post கடலூரில் கிலோ ரூ.20க்கு தக்காளி விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: