இதுகுறித்து அவர்கள் கொடுத்த தகவல்படி, மணவாளநகர் போலீசார் சென்று விசாரித்தபோது விவசாயி தாமோதரனுக்கு சொந்தமான 26 சென்ட் நிலத்தில் வேர்க்கடலை, மிளகாய் பயிரிட்டுள்ளனர். காட்டுப்பன்றிகளிடம் இருந்து பயிர்களை பாதுகாக்க அனுமதி பெறாமல் மின் வேலி அமைத்திருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து தனசேகரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஷாக் அடித்து காயம் அடைந்த அமலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து நித்யா கொடுத்துள்ள புகாரின்படி, மணவாளநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post திருவள்ளூர் அருகே பரிதாபம்; விவசாய நிலத்தில் அமைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி வாலிபர் பலி: தேடிச்சென்ற பெண் மீது மின்சாரம் பாய்ந்தது appeared first on Dinakaran.