திருப்பூரில் மர்மநபர்கள் தாக்கியதில் படுகாயம் அடைந்து சிகிச்சையில் உள்ள செய்தியாளருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு

சென்னை: திருப்பூரில் மர்மநபர்கள் தாக்கியதில் படுகாயம் அடைந்து சிகிச்சையில் உள்ள செய்தியாளருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திருப்பூரில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு முதலமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளார். பத்திரிகையாளர் நல வாரியத்தில் இருந்து ரூ.3 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார். அடையாளம் தெரியாத நபர்களால் செய்தியாளர் தாக்கப்பட்ட செய்தி அறிந்து வருந்தினேன். ஊடக செய்தியாளர் நேச பிரபு மீதான தாக்குதல் மிகவும் கண்டனத்துக்குரியது என முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

The post திருப்பூரில் மர்மநபர்கள் தாக்கியதில் படுகாயம் அடைந்து சிகிச்சையில் உள்ள செய்தியாளருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: