திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரியில் உண்டியல் காணிக்கை ரூ.116.46 கோடி..!!

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரி மாதத்தில் பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக ரூ.116.46 கோடி செலுத்தியிருந்தனர் என்று கோயில் செயல் அலுவலர் தெரிவித்துள்ளார். ஜனவரி மாதம் திருப்பதி கோயிலில் 21.09 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். ஜனவரியில் பக்தர்கள் 1.03 கோடி லட்டுகளை வாங்கியுள்ளனர்; 7.05 லட்சம் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தியுள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்த 46.46 லட்சம் பக்தர்களுக்கு அன்ன பிரசாதம் வழங்கப்பட்டது.

 

The post திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரியில் உண்டியல் காணிக்கை ரூ.116.46 கோடி..!! appeared first on Dinakaran.

Related Stories: