இதுகுறித்து உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், ‘பிஎஸ்எஃப் டிஜி நிதின் அகர்வால், அவரது பணியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் கேரளா கேடர் அதிகாரி என்பதால், அவரது சொந்த கேடர் மாநிலத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார். சிறப்பு டிஜியாக இருந்த ஒய்.பி.கரானியாவும் நீக்கப்பட்டு, அவரது ஒடிசா கேடருக்கு திருப்பி அனுப்பப்பட்டார். ஜம்மு செக்டாரில் ஊடுருவல் வழக்குகள் அதிகரித்து வருவதால், பிஎஸ்எஃப் டிஜி நிதின் அகர்வால் பணியில் இருந்து நீக்கப்பட்டார். ஜம்மு காஷ்மீரில் சர்வதேச எல்லை மற்றும் எல்ஓசியின் சில பகுதிகளை பிஎஸ்எஃப் பாதுகாக்கிறது’ என்று தெரிவித்தன.
The post தீவிரவாதச் சம்பவங்கள் அதிகரிப்பு; 2 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் நீக்கம்: சொந்த கேடருக்கு அனுப்பிவைப்பு appeared first on Dinakaran.