கொரோனா நோய் தொற்று காலத்தில் சித்த மருத்துவம் மிக முக்கிய பங்கு வகித்தது. எனவே, ஸ்ரீரங்கம் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில், அழகர்கோவில், நெல்லையப்பர் கோயில், திருச்செந்தூர் சுப்ரமணியசாமி கோயில், சங்கரன்கோவில் சங்கரநாராயண சாமி கோயில் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற கோயில்களில் உடனடியாக சித்த மருத்துவ பிரிவை துவக்குமாறு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு கூறியிருந்தார். மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.தனபால் ஆகியோர், மனுவிற்கு அறநிலையத்துறை தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.
The post கோயில்களில் சித்த மருத்துவ பிரிவு துவக்கக் கோரி வழக்கு: அறநிலையத்துறை பதிலளிக்க உத்தரவு appeared first on Dinakaran.